காணாமல் போன முதியவர் பற்றைக்குள் சடலமாக மீட்பு

breaking
  வடதமிழீழம்: யாழ்ப்பாணம் கரவெட்டி விக்னேஸ்வரா வீதியைச் சேர்ந்த இலங்கை மின்சார சபையின் சாரதியாக கடமையாற்றி இளைப்பாறிய ஸ்ரீகாந்தராஜா செல்வகுமார் வயது [64 ]வீட்டிலிருந்து வெளியேறியவரை 4 நாட்களாக காணவில்லை என அவர்களுடைய பிள்ளைகள் தேடி அலைந்த நிலையில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்கள். இன்று கிடைக்கப்பட்ட தகவலின்படி வல்லை வெளியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. நெல்லியடி பொலிசார் அங்கு சென்று பார்த்த பொழுது செல்வக்குமார் உடைய சடலம் என அடையாளம் காட்டப்பட்டது. அவர் கொண்டு சென்ற மோட்டார் சைக்கிளும் அவருக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தற்போது சடலம் மரண விசாரணைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மரண விசாரணை நடைபெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.