காவல்துறையினர் பொதுமக்களிடம் விடுக்கும் முக்கிய கோரிக்கை

breaking
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் சின்னம் மற்றும் இலக்கங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்கள் அணிவதை தவிர்த்து கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் ஆராயுமாறு சகல காவல்நிலையங்களுக்கும் பதில் காவல்துறைமா அதிபர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.