கொரோனாவால் யாழ்.இளைஞன் பிரான்ஸில் உயிரிழப்பு

breaking
  கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட யாழ் இளைஞர் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன மல்லாகத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் அஜந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சுமார் 1 மாதமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தனிமைப்படுத்தல் விதிகளின் கீழ், இறுதி நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.