யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத மர்ம நபர்கள் பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த சம்பவத்தால் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்றோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.