நாளை பாடசாலைகள் ஆரம்பம்: மேலதிக தகவல்கள்

breaking
  நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இரண்டாம் கட்டமாக அனைத்து பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை (06) திறக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் தரம் 05, 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. நாளைய தினம் அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் கற்பித்தலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தரம் 5 முதல் தரம் 11 வரையான மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதுடன், தரம் 13 மாணவர்களுக்காக காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதிபர்களின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே, ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு பிரவேசிக்கவும் வெளியேறவும் வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், அனைத்து ஆசிரியர்களும் பிற்பகல் 3.30 மணி வரை பாடசாலைகளில் கடமைகளின் இருக்கவேண்டிய தேவை இல்லை எனவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.