கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின விலை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு ஆண்டுகளின் பின்னர் தங்கத்தின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின விலை 1,766.60 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.
இதேவேளை கடந்த ஜூன் 18 ஆம் திகதியிலிருந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது.
உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்வார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுண். இது 24 கரட் சொக்கத் தங்கம் ஆகும்.
இந்த நிலையில் இலங்கையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 95, 000 ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.