அங்கயனுக்கு வாக்கு போட்டால் வேலை பெற்று தருவதாக கரவெட்டி மக்களை ஏமாற்றும் இளைஞர் அணி

breaking
  வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் நேற்றிரவு அங்கஜனின் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் காவல்துறையை பார்த்து தலை தெறிக்க ஓடியுள்ளார்கள். கரவெட்டிப் பகுதியில் சில இளைஞர்கள் அங்கஜனின் இளைஞர் அணி என இயங்கிவருவதுடன் வரும் ஆட்சியில் வேலை பெற்றுத் தருவதாக மக்கள் மத்தியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறித்த இளைஞர்களே நேற்றைய தினம் சுவரொட்டி ஒட்டுக் கொண்டிருந்தவேளை காவல்துறையை பார்த்து ஓடியுள்ளார்கள். காவல்துறையை கண்ட வேளையில் சில சுவரொட்கள் மட்டுமே ஒட்டப்பட்டிருந்ததால் மிகுதி அருகிலிருந்த காணிக்குள் வீசி விட்டே ஓடியிருப்பதாக தெரியவருகிறது. குறித்த இளைஞர் அணியில் உள்ள எமக்கு தரவல்ல இளைஞனின் கூற்றுப்படி இன்றிரவு நேற்று வீசிய சுவரொட்கள் மீளவும் எடுத்து ஒட்டப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.