வெற்றிலைக்கேணியில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது

breaking
  யாழ்.வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சட்டத்திற்கு மாறான கடற்றொழில் ஈடுபட்ட 10 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். உடுத்துறை கடற்பகுதியில் நேற்று இரவு வெளிமாவட்ட மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இன்று 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் வெளிமாவட்ட மீனவர்களால் சட்டத்திற்கு மாறான கடற்றொழில் ஈடுபடுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து வெளிமாவட்ட மீனவர்கள் 10 பேர் மற்றும் இரு படகுகள், சிலின்டர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை அத்துடன் தேர்தல் கால செயற்பாடும் ஆகும். கடந்த காலங்களில் பேரினவாத சிங்கள அரசின் அனுமதியுடனேயே தமிழ் மக்களது பிரதேசங்களில் வேறிடத்தை சேர்ந்தவர்கள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டிருந்தது குறிப்பித்தக்கது.