பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதி க்கு கொரொனா

breaking
  தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதி ஜீனைன் ஏயெஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், வைத்தியர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக அந்நாட்டு சுகாதரத்துறை அமைச்சர் உள்ளிட்ட இரண்டு அமைச்சர்களுக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பொலிவியாவில் இதுவரை 42 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1500 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தென்னமெரிக்கா பிராந்தியத்திலுள்ள பிரேஸிலின் ஜனாதிபதியும் ஏற்கனவே கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.