மொரட்டுவை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

breaking
மொரட்டுவை - லுனாவ பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறுவிளைவித்த குற்றச்சாட்டில் 39 வயதான ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது. குறித்து சம்பவம் இன்று அதிகாலை 12.30 அளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில், ஈடுபட்டிருந்த அங்குலான பொலிஸார் மூவர் திடீர் வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது முச்சக்கர வண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் இருந்தவர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த நபர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதையடுத்து, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தையடுத்து பொலிஸ் அதிகாரிகளை அப் பிரதேச மக்கள் சுற்றிவளைத்துள்ளதையடுத்து அங்கு பதற்ற நிலையேற்பட்டுள்ளதால் அங்கு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.