வட தமிழீழம் , யாழ்ப்பாணம் மாவட்டத்தின் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள பிரதேசங்களில் கிராம அலுவலகர் பிரிவு ஒவ்வொன்றுக்கும் சிங்கள பேரினவாத இராணுவ ஆள் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிராம அலுவலகர் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் – நுகர்வை ஒழித்தல் போன்றவற்றை அந்தப் பகுதி இராணுவ அலுவலகர் முன்னெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுக்கும் இராணுவ அலுவலகர் ஒருவர் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் இராணுவச் சிப்பாய்கள் கடமைக்கு அமர்த்தப்படுவர்.
முக்கிய குறிப்பு:
மேற்படி சிங்கள பேரினவாதம் அரசாங்கம் சொல்லும் குற்றச்செயல்களான போதைப்பொருள் விற்பனை – கடத்தல் ஆகியவை சிங்கள பேரினவாத அரசாங்கமே திரைமறைவில் தமிழர் தாயகத்தில் இயக்குகின்றன , எமது மக்களை அச்சுறுத்தி எமது குரலை நசுக்கும் முயற்சியே இது , தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலைபெறுமானால் வரலாற்று சொல்லிய செய்தியின்படி மீண்டும் எமது மக்கள் வெகுண்டேழுவோம்