யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரொனா பரிசோதையின் முடிவுகள்

breaking
  யாழ். பரிசோதனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்று திரும்பிய இருவர் உள்ளிட்ட 53 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட 53 பேருக்கான பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 53 பேரின் விபரங்கள் யாழ் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர்கள் – 3 பேர் (இருவர் கந்தகாடு முகாமிற்கு சென்று வந்தவர்கள்) வெளிநோயாளர் பிரிவு – 2 பேர். காங்கேசன்துறை கடற்படை வைத்தியசாலை – 2 பேர். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவு மன்னார் – 10 பேர். ஆதார வைத்தியசாலை முழங்காவில் – 5 பேர். பொது வைத்தியசாலை மன்னார் – 4 பேர். நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மன்னார் – 7 பேர். வைத்திய அதிகாரி பிரிவு மருதங்கேணி – 20 பேர்.