இலங்கையில் கொரோனா 2வது அலை தாக்கம் அதிகமாக உணரப்படும் நிலையில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்கும் நடவடிக்கை தற்காலிகமாக மீண்டும் நிறுத்தபட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக வரும் ஜூலை-14ம் திகதியில் இருந்து இந்நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தற்போதைய நிலமையின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் போதிய அளவு வசதி இல்லாத காரணத்தால் இவ்வாறு மட்டுப்படுத்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.