அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவமனை அமைக்கவேண்டும் -பழ. நெடுமாறன்

breaking
கரோனா சிகிட்சைக்கு அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவமனை அமைக்கவேண்டும். - முதல்வருக்குவேண்டுகோள்! தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அறிக்கை… சென்னையில் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியாக அமைக்கப்பட்ட சித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1050-க்கும் மேற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் கொடுக்கப்பட்டு அவர்களில் 750-பேர் முழுமையாக நலம் பெற்றுத் திரும்பியுள்ளனர், 300-பேர் சிகிட்சைப் பெற்று வருகிறார்கள், அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஒரு உயிரிழப்புக் கூட ஏற்படவில்லை என அம்மருத்துவமனையின் மருத்துவர் வீரபாபு அறிவித்திருக்கும் செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக அவரையும், அவருடன் தொண்டாற்றி வரும் சித்த மருத்துவப் பணியாளர்களையும் மனமாறப் பாராட்டுகிறேன். பல மாவட்டங்களிலும் கொரோனா நோய் பரவிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அலோபதி மருத்துவமனைகளில் சிகிட்சை அளிப்பதோடு, சித்த மருத்துவ முறையிலும் சிகிட்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கரோனா நோய் பரவியிருக்கும் மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒன்றாக சித்த மருத்துவமனைகளைத் திறந்து, சித்த மருத்துவமுறையில் சிகிட்சை அளிக்க முன் வருமாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சரையும், முதலமைச்சரையும் வேண்டிக்கொள்கிறேன்.