ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த நாலு பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இச்சம்பவம் நாகர்கோவில் பகுதியில் உள்ள புன்னையடிவைரவர் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை பூசை வழிபாடுகள் இடம்பெற்று கொண்டிருந்த சமயம் அங்குள்ள மரத்தில் இருந்ததாகக் கூறப்படும் பப்பறவாயன் என்னும் குளவி தாக்கியதாக தெரியவருகிறது.
இதில நாலுபேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் அம்பன் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்