போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

breaking
போலி நாணயத்தாள்கள் 57 உடன் பெண் ஒருவர் உட்பட இருவர் குருவிட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருவிட்ட பொலிஸாரிற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 21, 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 34 மற்றும் 10 ரூபா போலி நாணயத்தாள்கள் 2 உம் கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.