மட்டக்களப்பில் முழுமூச்சாக மீளக்கட்டியமைத்துவர் லெப்.கேணல் சேனாதிராசா

breaking
தென்  தமிழீழத்தில் , மட்டக்களப்பு மருத்துவமனையில் 13.07.2004 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட மட்டு. நகர அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் சேனாதிராசா வின் 16 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.   மட்டக்களப்பு நகரில் அரசியற் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த லெப்.கேணல் சேனாதிராசா 05.07.2004 அன்று அரசடிச் சந்திப் பகுதியில் வைத்து சிறிலங்கா படை ஒட்டுக்குழுவின் துப்பாக்கிச் சூட்டில் விழுப்புண்ணடைந்து மட்டக்களப்பு மருத்துவமனையில் பண்டுவம் (சிகிச்சை) பெற்றுவரும் வேளை 13.07.2004 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். அரசியற்துறையின் முக்கிய போராளியான லெப்.கேணல் சேனாதிராசா , மட்டக்களப்பு மண்ணில் துரோகச் செயற்பாடு முறியடிக்கப்பட்ட பின்னர் மீளவும் மட்டக்களப்பு நகர அரசியற் பொறுப்பாளராக கடமையேற்று விடுதலைப் போராட்டத்தை மீளக்கட்டியமைக்கும் பணியினை முழுமூச்சாக மேற் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.