இளைஞனின் உயிரைக் குடித்த மாட்டெரு

breaking
வவுனியா - சேமமடு பகுதியில் மாட்டெருவில் இருந்து கிளம்பிய விசவாயு தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா- ஓமந்தை, சேமமடு பகுதியில் இன்று பாரவூர்தி ஒன்றில் மாட்டெருவை ஏற்றிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் இளைப்பாறுவதற்காக அதன் மீது அமர்ந்துள்ளார். இதன்போது மாட்டெருவில் இருந்து தாக்கிய விசவாயு காரணமாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக ஓமந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, உயிரிழந்துள்ளார். இதன்போது எஸ்.ரஞ்சிதகுமார் (வயது 28) என்ற இளைஞனே உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.