யாழில் ரவுடிகளிற்கு துண்டுப் பிரசுரங்கள் மூலம் எச்சரிக்கை

breaking
  வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் குழு மற்றும் சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் அரியாலைப் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பரவலாக ஒட்டப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. N.G.T என்று உரிமை கோரப்பட்ட அமைப்பு ஒன்றினாலேயே மேற்படி எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.