சிறிலங்காவில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் விபரம்

breaking
  நேற்று (12) இலங்கையில் 106 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அநுராதபுரம் ராஜாங்கணையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஆலோசருடன் தொடர்பை பேணிய 6 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பெலாரஸிலிருந்து நாடு திரும்பிய 5 பேர், பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய 2 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து நாடு திரும்பிய ஒருவர் உள்ளிட்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 2617 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1981 ஆகவும் உள்ளது. தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 625 ஆகும்