பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டு தப்பிச்சென்ற பாரவூர்தி!

breaking
ஹக்மன - கோன்ஹல பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை பாரவூர்தி ஒன்று மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்த நிலையில், 36 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும், சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன், தொடர்புடையவர்களை கைதுசெய்ய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.