ராஜாங்கனையில் 12 வயது சிறுவனுக்கு கொரோனா உறுதி

breaking
ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2687 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2688 ஆக அதிகரித்துள்ளது.