கொரொனா தடுப்பூசி வெற்றி: ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அறிவிப்பு

breaking
  கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி அடைந்துள்ளதாக பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பிரிட்டன் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்புக்கும் பணியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தாங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மொத்தம் 1,077 பேருக்கு தடுப்பூசி செலுத்தி சோதனை செய்யப்பட்டதில், அவர்கள் அனைவருக்கும் கொரோனா எதிர்ப்பாற்றல் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, பிரிட்டன் அரசு மொத்தம் 10 கோடி தடுப்பூசிகளை, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திடம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.