கொரோனாவால் இறந்த தாயின் உடலை ஜன்னலில் ஏறி பார்த்து கதறி அழுத மகன்!

breaking
கொரோனாவால் இறந்த தனது தாயின் உடலை ஜன்னலில் ஏறி பார்த்து அவரது மகன் அழுத சம்பவம் ஒன்று பாலஸ்தீன நாட்டில் இடம்பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் வைரஸ் பாதித்து இறப்பவர்களின் உடலை உறவினர்களிடம் கையளிக்காமல் மருத்துவமனை நிர்வாகமே பாதுகாப்பு நடைமுறைகளுடன் அடக்கம் செய்கின்றது. இதன் காரணமாக இறந்தவரின் உறவினர்கள் பலர் உடலை காண சோகத்தில் மூழ்கியுள்ளனர். பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரையில் பீட் ஆவா பகுதியை சேர்ந்த இளைஞர் ஜிகாத் அல் ஸ்வைட்டி. இவர் 73 வயதான கொரோனா பாதிக்கப்பட்ட தனது தாயை பார்க்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவரது தாயார் இறந்துள்ளார். இதனை கேள்விப்பட்ட ஜிகாத் கதறி அழுதுள்ளார். எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தாயின் உடலை கூட அவரால் பார்க்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த ஜிகாத் அங்கிருந்த ஜன்னலில் ஏறி தனது இறந்த தாயின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.