டெல்லியில் கொரோனா கவனிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமிக்கு மற்றொரு நோயாளி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேசான அறிகுறிகளுடன் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சர்தார்பூரில் 10 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா கவனிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுமி கழிவறைக்கு சென்றபோது அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞன் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ள நிலையில்,
இந்த சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.