இந்த ஒப்பந்தம், 30 நாட்களில் உருவாக்கப்பட உள்ள புதிய ஏமன் அரசில் தெற்கு இடைக்கால கவுன்சில் பிரிவினைவாதிகள் இடம் பெறுவதற்கு வழிவகை செய்துள்ளது. மேலும், இந்த ஒப்பந்தமானது, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசை ஆதரிக்கும் சவுதி கூட்டணியில் ஏற்பட்ட பிளவினை சரி செய்யும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.