சிறிலங்காவின் முன்னாள் குற்றத்தடுப்பு பணிப்பாளர் கைது

breaking
  குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கைதுசெய்ப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர சாட்சிகளை மறைத்த குற்றச்சாட்டிலேயே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஷானி அபேசேகர இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.