வீரவன்சவுக்கும் கம்மன்பிலவுவுக்கும் கடும் எதிர்ப்பு: போன வேகத்தில் திரும்பி வந்தனர்

breaking
அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கொழும்புத் துறைமுகத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்களை சந்திக்கச் சென்றபோது கடுமையான கூச்சல் மற்றும் எதிர்ப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து இப்போராட்டம் நடத்தப்படுகின்றது. இந்நிலையில் நேற்று இரவு குறித்த அரச பிரதிநிதிகள் அவ்விடத்திற்கு சென்று சமரசப் பேச்சு நடத்த முயற்சித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துறைமுக ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பினை தங்களது கூச்சல் குரலில் வெளியிட்டுள்ளனர். நிலைமையை புரிந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அங்கிருந்து நழுவிச் சென்றுள்ளனர்.