லெப். கேணல் மாதவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்

breaking
லெப். கேணல் மாதவன், லெப். கேணல் தட்சாயினி, கப்டன் பாஞ்சாலி வீரவணக்க நாள் இன்றாகும். 03.08.1997 அன்று கிளிநொச்சி மாவட்ட பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் எதிர்பாராமல் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி” லெப். கேணல் மாதவன் / சுனித் மற்றும் வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் தட்சாயினி, கப்டன் பாஞ்சாலி ஆகிய மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கிளிநொச்சி பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது… வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா வான்படை நடாத்திய குண்டு வீச்சின்போது…
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”