அங்கஜனின் பிரசுரங்களுடன் கைது?
வட தமிழீழம் , யாழ்ப்பாணம் , தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளையில் , துண்டுப்பிரசுரங்கள் கொண்டு சென்ற மூவரை சிங்கள பொலிஸார் கைது
செய்துள்ளனர்.சுன்னாகம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் வாகனத்தில்சென்று அங்கஜன் இராமநாதனின் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்ய முற்பட்ட வேளையில் இவ்வாறு
இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார்
விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை
எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.