திருகோணமலையில் வேட்பாளர் மீது தாக்குதல்

breaking
தென் தமிழீழம் , திருகோணமலை, - கிண்ணியா, குட்டித்தீவு பகுதியில் சுயேச்சைக்குழு வேட்ளர் ஒருவர் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்றுப் பிற்பகல் 3மணியளவில் இந்த தாக்குதல்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரும்பு கம்பிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  சிங்கள காவல்துறை  தெரிவித்தனர். காயமடைந்த வேட்பாளர் கிண்ணியாதள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.