தோற்றாலும் வென்றாலும் என்றும் மக்களோடு நாம்.... 

breaking
இந்தத் தேர்தலுக்காக எம்முடன் தமது நேரத்தை வீணாக்கி சொந்த பணத்தை செலவழித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்காக உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்! நாம் எமது அரசியற் செயற்பாட்டில் தேர்தல் அரசியலை பிரதானமாக பார்க்கவில்லை ஆனாலும் மக்களின் அடையாளப்படுத்தல் என்பது எமது பயணத்திற்கு இன்றியமையாதது. நன்னெறியற்ற முறையில் பாராளுமன்ற கதிரைகளை இலக்குவைத்து தேர்தல் அரசியலை செய்யும் மற்றவர்களோடு நேர்மையான வழியில் போட்டி போடுவது என்பது மிகக் கடினமான காரியம். ஆனாலும் நம்மைச் சூழ்ந்த எல்லாம் இருட்டடிப்புகளுக்கும் மத்தியில் நாம் மக்களின் மனங்களிலே இடம் பிடித்து வருகிறோம் என்பது எமக்கு உற்சாகத்தை தருகிறது. மீண்டும் ஒரு முறை எமக்காக உழைத்த நல் உள்ளங்களுக்கு நன்றியை தெரிவிப்பதோடு எத்துயர் வரினும் நாங்கள் உங்களுடன் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தல் பிரச்சாரங்களுக்காக கடந்த இரண்டு மாதங்களாக தடைப்பட்டிருந்த எமது மக்களுக்கான செயற்பாடுகள் நாளை முதல் மீண்டும் உத்வேகம் எடுக்கும். தோற்றாலும்வென்றாலும்என்றும்மக்களோடுநாம்  இதுதேர்தலுக்கானஅரசியல் அன்றுதேசத்திற்கான அரசியல்.