2 மில்லியனை கடந்த கொரோனா தொற்றாளர்கள்

breaking
கொரோனா தொற்று 2 மில்லியனை கடந்த உலகின் மூன்றாவது நாடாக இந்திய பதிவாகியுள்ளது. கடந்த 20 நாட்களில் இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 170 பேராக பதிவாகியுள்ளதுடன் அந் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25 இலட்சத்து 409 பேராக பதிவாகியுள்ளது. உலகில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியினை அண்மித்துள்ளது.