சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் தொகையொன்று மீட்பு

breaking
சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் தொகையொன்றை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் தொகையின் மொத்த பெறுமதி ஒரு கோடி என இராணுவத்தின் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து மீன்பிடிக் கப்பல் ஊடாக குறித்த பொருட்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்போது மீன்பிடிக் கப்பலின் உரிமையாளர் மற்றும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட நபர்களை கல்பிட்டி காவல்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.