கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் !

breaking
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கையில், கொரோனா வைரஸ் எனப்படும் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2841ஆக அதிகரித்துள்ளது. இன்றையதினம் அடையாளம் காணப்பட்ட இருவரும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில், கொரோனா எனப்படும் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களில் 254 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2576 பேர் பூரண குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.