யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வருகின்ற வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கான விடுமுறைகள் ரத்து!

breaking
யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வருகின்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து காவல்துறையினருக்கான விடுமுறைகள் அனைத்ந்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குடநாட்டின் பல இடங்களிலும் வாள்வெட்டுச் சம்பவங்கள் பாலியல் துஸ்பிரயோகம் கொலை போன்ற வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்நியிருக்கின்றன. இந் நிலையில் காவல்துறை மீது பல்வேறு தரப்பினர்களும் குற்றஞ்சாட்டியிருந்ததுடன் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்தாவது குழுவின் அட்டகாசங்கள் மற்றும் குற்றச் செயல்கள் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும. வகையில் போலிஸாரால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் யாழ் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அனைத்துப் காவல்துறையினருக்கான  விடுமுறைகள்  இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.