நாம் தமிழர், மே 17 இயக்கங்கள் தடை செய்யப்படும் - எச். ராஜா பகீர் தகவல்.!

breaking
தொடர்ச்சியாக மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை போராடுமாறு தூண்டிவிட்டு வரும் இயக்கங்கள் நாம் தமிழர் கட்சி மற்றும் மே 17 இயக்கம் ஆகியன மத்திய அரசினால் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார் பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா. தங்களது வாழ்வாதாரத்தினை, தார்மீக உரிமைகளை காத்துக்கொள்ள தமிழகம் முழுவதும் மக்கள் தொடர்ச்சியாக பல தரப்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். காரணம், மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசுகள்தான். தற்போது, சேலம் 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவரக்கூடிய சூழலில் மக்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவருகிற சமூக ஆர்வலர்களை தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது தமிழக அரசு. இந்த நிலையில், தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர்எச்.ராஜா, மக்கள் மத்தியில் கிளர்ச்சி கருத்துக்களை தெரிவித்துவரக்கூடிய, அவர்களை அரசுக்கு எதிராக போராடும்படி தூண்டிவிட்டுவரக்கூடிய நாம் தமிழர் கட்சி, மே 17 ஆகிய இயக்கங்கள் தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.