சேலம் - சென்னை 8 வழிச்சாலை விவசாயிகளைப் பெரிய அளவுக்குப் பாதிக்கும்.!

breaking
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை :
நிலத்தை மட்டுமே நம்பி வாழும் சிறு விவசாயிகளைப் பெரிய அளவுக்குப் பாதிக்கும் வகையில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை பாதைக்கு எதிராக போராடுபவர்கள் அனைவரையும் கைது செய்து பொய் வழக்குப் போடும் காவல் துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
நகர்ப்புற விரிவாக்கத்தின் விளைவாக கிராமப்புற நிலப்பரப்பு சுருங்கிக் கொண்டே வருகிறது.இதன் விளைவாக உணவு தானியம் உற்பத்திக் குறைந்து தமிழக மக்கள் உணவுக்காக பிற மாநிலங்களை சார்ந்து வாழக் கூடிய நிலை உருவாகும் என்பதை சற்றும் உணராத போக்கில் மத்திய - மாநில அரசுகள் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
8 வழழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராடியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறும் இத்திட்டத்தை உடனடியாகக் கைவிடுமாறு வற்புறுத்துகிறேன்.
 
அன்புள்ள
பழ.நெடுமாறன்