அராலிப்பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

breaking
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இன்று காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலி மேற்கை சேர்ந்த கந்தையா நாகசாமி என்ற 71 வயதான நபரே சடலாமக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டிற்கு வெளியே படுத்துறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் வீட்டார் வெளியே வந்து பாத்த போதே இவர் சடலமாக காணப்பட்டுள்ளார். அத்துடன் சடலத்திற்கு அருகில் கயிறு காணப்பட்டதாகவும் காவல்துறையினர்  தெரிவித்தனர். இச் சம்பவமானது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் அது தொடர்பான விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வட்டுக்கோட்டை காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.