மெரினாவில் இடம் ஒதுக்க ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள்.!

breaking
கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
காவேரி மருத்துவமனையில் உயிரிழந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய திமுக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் சட்ட சிக்கல்களை காரணம் காட்டி தமிழக அரசு திமுகவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இதனையடுத்து வேண்டும், வேண்டும் மெரினா வேண்டும் என திமுக தொண்டர்கள் முழக்கமிட்டு கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியை நல்லடக்கம் செய்ய தார்மீக உரிமை உள்ளது. எனவே மெரினாவில் கருணாநிதியை நல்லடக்கம் செய்வதற்கு தமிழக அரசு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.