தற்போதைய அரசாங்கத்திலும் மக்களிற்கு நம்பிக்கை இல்லை

breaking
  ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தினால் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (08.08.18) காலை அஸ்கரிய மற்றும் மல்வது பீட மஹா நாயக்க பெளத்த குருமார்களை சந்தித்து அவர்களின் ஆசிகளை பெற்ற அமைச்சர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தான் பெற்றோலிய கூட்டத்தாபனத்துக்கு தேசிய விளையாட்டு வீரர்களை நியமிக்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தயாரித்த போதும் ஆனால் அது அமைச்சரவையினால் நிராகரிக்கப்பட்டது. எனினும் தனது கடமையை தான் சரியாக செய்ததாக தெரிவித்தார். தான் இந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தமைக்கு காரணம் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும், தேசிய விளையாட்டு வீரர்களுக்கு அரச வேலைவாய்ப்பை வழங்கும் நோக்குடன் தயாரித்த அமைச்சரவைப் பத்திரத்தை போன்றதேயாகும்.´ என அவர் தெரிவித்துள்ளார்.