சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

breaking
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று (08-06-2016) நடைபெற்றுள்ளது. சர்வதேச புகைத்தல் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சித்திணைக்;களத்தின் ஏற்பாட்டிலான சர்வதேச புகைத்தல் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபவணி நேற்று (08-06-2016) கிளிநொச்சி டிப்போச்சந்தியில் இருந்து ஆரம்பமாகி ஏ-9 வீதியாக கரைச்சிப்பிரதேச செயலகம் வரை சென்று அங்கு போதை பொருள் விழிப்புணர்வு செயற்பாடு இடம்பெற்றது. இதில் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் கிராம அலுவலர்கள் கரைச்சிப்பிரதேச செயலர் கோ.நாகேஸ்வரன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.