லெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

breaking
லெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.! 22.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதி நோக்கி “ஜெயசிக்குறு” நடவடிக்கைப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட பாரிய முன்நகர்வு முயற்சிக்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் தூயமணி உட்பட ஏனைய (13) மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.   20.08.1997 அன்று உலங்கு வானூர்திகள் மற்றும் ஆட்டிலறி பீரங்கிகளின் சூட்டாதரவுடன் டாங்கிகள் மற்றும் கவச ஊர்திகளின் துணையுடன் புளியங்குளத்தை கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படையினரால் பாரிய படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமது முன்னரங்க நிலைகளை ஊடறுத்து உள்நுழைந்த சிறிலங்கா படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் பல மணிநேரம் தீரமுடன் களமாடி படை நடவடிக்கையை முற்றாக முறியடித்தனர். விடுதலையின் கனவுகளுடன் கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.!  

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”