'ஜனபலய' மூலம் மகிந்த கூட்டத்தின் ரவுடித்தனம் வெளிவந்தது, கோத்தாவுக்கும் நாமலுக்கும் நன்றி

breaking
மஹிந்த ராஜபக்சவிடம் ஆட்சியதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் அதன் உண்மையான இலட்சணம் எவ்வாறு இருக்கும் என்பதைப் புடம் போட்டுக் காட்டும் வகையிலேயே ஜனபலய ஆர்ப்பாட்டம் இருந்ததாக தெரிவிக்கிறார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோரின் ரவுடித்தனமான நடவடிக்கைகள் அதனையே எடுத்துக் காட்டுவதாகவும் அதற்கு மஹிந்த - நாமல் - கோத்தாவுக்கே நன்றி சொல்ல வேண்டும் எனவும் சம்பிக்க மேலும் தெரிவித்துள்ளார். ஜனநாயக வழியிலன்றி வேறு எந்த வகையிலும் நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர முடியாது எனவும் சம்பிக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.