கடற்கரும்புலி மேஜர் நல்லமுத்து, கடற்கரும்புலி கப்டன் புலிமகள் வீரவணக்க நாள்

breaking
கடற்கரும்புலி மேஜர் நல்லமுத்து, கடற்கரும்புலி கப்டன் புலிமகள் வீரவணக்க நாள் இன்றாகும்.! முல்லைக் கடற்பரப்பில் 23.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையின் அதிவேகப் விசைப்படகு (டோறா) மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நல்லமுத்து, கடற்கரும்புலி கப்டன் புலிமகள் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட தேசப்புயல் .! இவர்களுடன் கடலிலி காவியமான…… கடற்புலி மேஜர் திருமலை (உருத்திரசிங்கம் ரவிநந்தன் – ஏழாலை, யாழ்ப்பாணம்) தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”