ஈருருளிகளில் செல்லும் பெண்களின் பைகளை தூக்கும் திருடன்: தென்மராட்சியில் சம்பவம்

breaking
  சாலை­க­ளில் ஈரு­ரு­ளி­க­ளில் சென்ற இரு பெண் க­ளின் கைப்­பை­களை உந்­து­ரு­ளி­யில் வந்த ஒரே நபர் வெவ்­வேறு இடங்­க­ளில் வைத்து அப­க­ரித்­துள்­ளார். மூன்­றா­வது இடத்­தில் மக­ளு­டன் சென்ற தாய் கைப்­பையை கை விடா­மல் சத்­த­மிட்­ட­தால் முயற்­சி­யைக் கைவிட்டு தப்­பி­யோ­டி­யுள்­ளார். இந்­தச் சம்­ப­வங்­கள் நேற்று முற்­ப­கல் 10.00 மணிக்­கும் 12 மணிக்­கு­மி­டை­யில் நுணா­வில் கிழக்கு, கற்­குளி, டச்சு சாலை ஆகிய இடங்­க­ளில் நடந்­துள்­ளன. நுணா­வில் மேற்கு கல்­லடி மூட்டு பகு­தி­யி­லும் கற்­கு­ழிப் பகு­தி­யி­லும் ஈரு­ரு­ளி­க­ளின் முன் கூடைக்­குள் வைக்­கப்­பட்­டி­ருந்த கைப்­பை­களை அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. சாவ­கச்­சே­ரி­யில் நகை எடுத்­துக் கொண்டு மக­ளு­டன் ஈரு­ரு­ளி­யில் சென்ற பெண்­ணின் கைப்­பையை தோளி­லி­ருந்து பறிக்க முற்­பட்ட வேளை­யில் கைப்­பையை இறுக்­க­மா­கப் பிடித்த பெண் கூக்­கு­ர­லி­டவே திரு­டன் தப்­பி­யோ­டி­யுள்­ளான். மூன்று பெண்­க­ளும் வழங்­கிய தக­வ­லின் அடிப்­ப­டை­யில் ஒரே நபரே வழிப்­ப­றி­யில் ஈடு­பட்­டுள்­ளார் என நம்­பப்­ப­டு­கி­றது. கைப்­பை­க­ளில் பணம் அலை­பே­சி­கள் உட்­பட ஆவ­ணங்­கள் இருந்­தன என்று கைப்­பை­களை பறி கொடுத்­த­வர்­கள் தெரி­வித்­த­னர்.