ரணிலுக்கு மேலான அதிகாரம் கொண்டவர் சரத் பொன்சேகா?

breaking
தீர்மானங்களை எடுக்கும் போது இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மேலான அதிகாரம் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என பிரதமர் நாடாளுமன்றத்தில் கூறினார். எனினும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு பாதுகாப்பு வழங்குவது அவசியமற்றது என அமைச்சர் பொன்சேகா கூறியுள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.