லெப். கேணல் சுபன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

breaking
லெப். கேணல் சுபன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின் போது 25.09.1992 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி” லெப். கேணல் சுபன் உட்பட ஏனைய (07) மாவீரர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.   தாய்மண்ணின் விடியலிற்காக வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்.! மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் (வினாசித்தம்பி சுந்தரலிங்கம் – இலுப்பைக்கடவை, மன்னார்) லெப்டினன்ட் தமிழேஸ்வரன் (கார்த்திகேசு யோகேஸ்வரன் – துன்னாலை, யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அறிவுடையான் (செல்லையா உதயகுமார் – பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி) லெப்டினன்ட் இயல்வாணன் (சுமன்) (முருகேசு வரதராஜன் – துணுக்காய்முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் பன்னீர்ச்செல்வன் (சாந்தியாப்பிள்ளை அல்போன்ஸ்டானியல் – தலைமன்னார், மன்னார்) 2ம் லெப்டினன்ட் சுருளி (நவரட்ணம ரவி – மூதூர், திருகோணமலை) வீரவேங்கை வெடியரசன் (இராமப்பிள்ளை மகாலிங்கம் – பூநகரி, கிளிநொச்சி) தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”