தென்மராட்சியில் வாள்வெட்டு இருவர் காயம்

breaking
  வாள்­வெட்­டுக்கு இலக்­கான நிலை­யில் இரு­வர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்தினம் இரவு சாவகச்சேரி கெற்­பேலி மேற்­கில் நடந்­துள்­ளது. பொன்­னையா விம­லன் (வயது––24), செல்­வ­ரத்­தி­னம் சுசீந்­தி­ரன் (வயது-–32) ஆகி­யோரே மருத்­து­வ­ ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள ­னர். தோட்­டத்­தில் இருந்து வீடு திரும்­பி­ய­போது வழி­ம­றித்த கும்­பல் ஒன்று தன்னை வாளால் வெட்­டி­யது என்­றும், அதில் தலை­யி­லும், கையி­லும் காய­ம­டைந்த நிலை­யில் மீண்­டும் வாளால் வெட்ட முயன்­ற­னர். அப்­போது வில­கி­ய­தால் தாக்க வந்த கும்­ப­லைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு வாள்­வெட்­டுக் காயம் ஏற்­பட்­டது என்று காயம்­பட்­ட­வர்­க­ளில் ஒரு­வ­ரான விம­லன் காவல்துறையிடம் தெரி­வித்­துள்­ளார். அதே­வேளை, கொடி­கா­மம் காவல்துறை பிரி­வுக்­கு­ட்பட்ட பகு­தி­க­ளில் கடந்த 3 தினங்­க­ளில் பெண் உட்­பட 4 பேர் வெட்­டுக­கா­யங்­க­ளு­டன் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில் இரு­வர் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­னர்.