வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் இருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு சாவகச்சேரி கெற்பேலி மேற்கில் நடந்துள்ளது.
பொன்னையா விமலன் (வயது––24), செல்வரத்தினம் சுசீந்திரன் (வயது-–32) ஆகியோரே மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ள னர்.
தோட்டத்தில் இருந்து வீடு திரும்பியபோது வழிமறித்த கும்பல் ஒன்று தன்னை வாளால் வெட்டியது என்றும், அதில் தலையிலும், கையிலும் காயமடைந்த நிலையில் மீண்டும் வாளால் வெட்ட முயன்றனர்.
அப்போது விலகியதால் தாக்க வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கு வாள்வெட்டுக் காயம் ஏற்பட்டது என்று காயம்பட்டவர்களில் ஒருவரான விமலன் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 3 தினங்களில் பெண் உட்பட 4 பேர் வெட்டுககாயங்களுடன் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.