வவுனியாவில் நேற்றுக் காலை 4 கிலோ 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அதை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று நேற்றுக் காலை 10 மணியளவில் வவுனியா, நொச்சிமோட்டைப் பாலத்துக்கு அண்மையில் வவுனியா காவல்துறை நிலையப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவால் சோதனையிடப்பட்டது.
அதன்போது கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, மகியங்கனையைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுட்டது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன என்றும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.